This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, May 20, 2012

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.
 
 
 
 

யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.
ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன் இணைக்கும் முயற்சி இது என இத்துறையில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் ஒன்றும் தவறு இல்லையே. ஸ்கைப் தேவைப்படுவோர் இப்போது அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. பிரவுசரிலேயே இது கிடைத்துவிட்டால், ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.

ஸ்கைப் பார் பிரவுசர்ஸ் (“Skype for Browsers”) என்ற திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பே மேற்கூறிய தகவலை உறுதி செய்வதாகவும், சில இணைய தளங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பேஸ்புக் வழியாக ஸ்கைப் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இது முழுமையான ஸ்கைப் திறன் கொண்ட தல்ல. இதில் எச்.டி.எம்.எல்.5 வசதிகள் கிடைப்பதில்லை. எனவே மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் இணைய வானத் தின் எல்லைகளைக் கூடுதல் வசதிகளுடன் விரிப்பதாக இருக்கும்.

இணையத்திற்கான ஸ்கைப் பதிப்பு வெளியானால், இணையத் தொடர்பினைத் தரும் எந்த ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவும், ஸ்கைப் தரும் வசதிகளை அனுபவிக்க முடியும். Voice over Internet Protocol எனப்படும் வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் மைக்ரோ சாப்ட் தன் பிரவுசரிலேயே இதனைத் தருவது, இதே போல வசதியினைத் தரும் மற்ற அப்ளிகேஷன்களுக்குச் சரியான போட்டியைத் தரும். மைக்ரோசாப்ட் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடம் முன்னணிக்கு வரும்; மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளும். பல முன்னணி நிறுவனங்களின் (Apple, Google, Cisco, LifeSize etc.) வீடியோ கான்பரன்சிங் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்கும்.

தற்போது ஸ்கைப் அப்ளிகேஷனை உலகெங்கும் ஏறத்தாழ 75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் வசதியைத் தன் பிரவுசரில் மட்டுமின்றி, ஆபீஸ், விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிலும் இணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் போல் தெரிகிறது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் நூறு கோடியைத் தாண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

பலரும் இது சாத்தியமே என எண்ணுகையில், ஒரு சில வல்லுநர்கள், ஸ்கைப் போன்ற ஒரு ஆடியோ, வீடியோ அப்ளிகேஷனை, பிரவுசர் மற்றும் ஆபீஸ் போன்றவற்றுடன் இணைப்பது இயலாத ஒன்று எனக் கருதுகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே ஸ்கைப் நமக்கு அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் இணைந்து கிடைக்கும் அந்நாளை எதிர்நோக்குவோம்

சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

பயாஸ் (BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.

ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

Friday, May 18, 2012

ஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு?

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தி நேற்று நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளுக்காக மாத்திரம், ரூ 25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக FirstPost செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.



இவ் விளம்பர கட்டுரைகள் தமிழ் நாட்டுப் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பேசப்படும் பல்வேறு மொழிகளிலான முக்கிய பத்திரிகை, நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

The Times of India, Hindustan Times, Economic Times, Asian Age, Indian Express, Financial Express, Hindu Business Lines, Mint, மற்றும் Business Standard ஆகிய நாளிதழ்களில் அதிலும் பெரும்பாலும் தமது முகப்பு பக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டிருந்ததாக மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, மும்பை, நியூடெல்லி ஆகிய நகரங்களில் வெளியாகாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகைகளான The Statesman, Kolkata,The Telegraph ஆகிய பத்திரிகைகளிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகள் நேற்று வெளியாகியதாக அந்த ஊடகம் சுட்டிக்கட்டியுள்ளது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இந்தியாவில் 1994 இல் அறிமுகமான STAR Network தொலைக்காட்சி சேவை, தற்போது BPL மொபைல் மற்றும் வொடாஃபோன் மொபைல் என்பவையே கோடிக் கணக்கில் செலவு செய்து இந்தியா முழுதும் நாளிதழ்களில் விளம்பரம் செய்வது வழக்கம். அதிக பட்சமாக வொடாஃபோன் ரூ 10 கோடியை செலவு செய்து சாதனை படைத்திருந்தது.

ஆனால் தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு நாளில் ரூ 25 கோடி செலவுக்கு, இவ்விளம்பர சாதனையை படைத்திருக்கிறது என First Post மேலும் விமர்சித்துள்ளது.

Thursday, May 17, 2012

உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.




ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

உணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.
 
 


அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Wednesday, May 16, 2012

ஜிமெயில் மீட்டர் (Gmail Meter)

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.




பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.

சில மெயில்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில காப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட காப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் "மிக முக்கியம்' எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.

ஆனால், இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள் கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல் கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர், இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும். இங்கு “gmail meter” என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.

இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.

Thursday, May 10, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

 


ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்

மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்


கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

Tuesday, May 8, 2012

20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது.

இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம்.

இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.



இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.

இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.

கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.

மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.

Monday, May 7, 2012

கேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அலசல் ரிப்போர்ட்

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து முதல் இடத்தில் இருக்கும் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீடு.

4.65 இஞ்ச் திரை கொண்ட நெக்சஸ் ஸ்மார்ட்போன் முன்பு, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான திரையுடன் காட்சியளிக்கிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் அதிக திரை கொண்டது.




ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் 1.4
ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் கொண்டது.

கேமராவிலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை காட்டிலும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதியினை தான் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவிலும் அசத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை தான் வழங்கும். மெமரி வசதியை பொருத்த வரையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மாடல்களில் பெற முடியும்.

நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை பெற முடியும் என்றால், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதியினையும் சேர்த்து பெற முடியும்.

மற்ற கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கையில், சிறந்த படைப்பாக கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங்.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையில் கிடைக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் விலை விவரத்தினை பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.